கோலாலம்பூர், நவ 28 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் வெள்ள நெருக்கடியை எதிர்நோக்கும் அரசாங்கத்தின் முன்னேற்பாடு நடவடிக்கை மற்றும் நிர்வாகம் தொடர்பில் விளக்கம் அளிப்பார். வெள்ள நெருக்கடி நிர்வாகம் குறித்து ஜெம்போல் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் Sஷம்சுல்கஹர் முகமட் டெலி கேள்வி எழுப்பியுள்ளதாக நாடாளுமன்ற இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள நெருக்கடியின்போது பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் பிரதமர் அன்வார் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டம் இவ்வாரம் வியாழக்கிழமையோடு நிறைவை அடைகிறது.
Check Also
Close