Latestஉலகம்

மகனின் நெகிழ்ச்சி பேச்சு, கண்கலங்கிய முகேஷ் அம்பானி

குஜராத், மார்ச் 3 – திருமணத்திற்கு முந்தையக் கொண்டாட்ட நிகழ்வில் மகன் ஆனந்தின் நெகிழ்ச்சிப் பேச்சைக் கேட்டு இந்தியக் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

“கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பதற்காக என் வாழ்க்கை வெறும் ரோஜா மலர்களால் மட்டும் அலங்கரிப்படவில்லை; நானும் முட்களின் வலியை அனுபவித்துள்ளேன்” என ஆனந்த் அம்பானி மேடையில் உருக்கத்துடன் கூறினார்.

“எனக்காக என் குடும்பம் நிறையச் செய்துள்ளது. சிறு வயது முதலே நான் பல உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து வந்துள்ளேன். ஆனால் என் பெற்றோர்கள் என்னை ஒரு போதும் கைவிட்டதில்லை. எனது கஷ்டத்தில் அவர்கள் உடனிருந்தார்கள்” என ஆனந்த் சொல்லி முடிக்க விருந்தினர்களின் கைத்தட்டல் காதைப் பிளந்தது.

மகனின் பேச்சைக் கேட்டு உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத அம்பானி கண்கலங்குவது பார்ப்போரை நெகிழ வைக்கிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் ஆசியாவின் பெரும் பணக்காரருமான அம்பானி, தனது மகன் ஆனந்துக்கும் ராதிகா மெர்ச்சன்டிக்கும் ஜூலையில் கோலாகலத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார்.

இதையொட்டி திருமணத்துக்கு முந்தையக் கொண்டாட்டாங்கள் குஜராத்தில் அவரின் சொந்த ஊரான ஜம்நகரில் மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றன.

உலகப் பிரபலங்கள், போலீவூட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் 50 ஆயிரம் பேருக்கு ‘ராஜ’ விருந்து கொடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!