கோலாலம்பூர், மார்ச் 14 – நாடு முழுவதும் புதிய கல்வி தவணை தொடங்கியுள்ளது.
குறிப்பாக, இவ்வாரம் தொடங்கியதிலிருந்து,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
எனினும், சமூக ஊடக பிரபலமான ஷாருல் ஷிரோ, தனது ஏழு வயது மகனை தவறான பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வந்த சம்பவம், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகனை பள்ளியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்ட போது, இரு பள்ளிகள் பட்டியலிடப்பட்டன.
அதன் பின்னர், வேலை பழு காரணமாக, மகனை பள்ளியில் பதியும் நடவடிக்கைகளை ஷாருல் ஷிரோவின் மனைவி கவனித்துள்ளார்.
அதனால், பள்ளி தொடங்கிய முதல் நாள், தனது மகனை தவறான பள்ளிக்கு
ஷாருல் ஷிரோ அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பள்ளிக்கு சென்றதும், அது இதற்கு முன் தாம் வந்த பள்ளி இல்லை என ஷாருல் ஷிரோவின் மகன் கூறியுள்ளார்.
எனினும், அதனை பொருட்படுத்தாமல் மகனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பிய ஷாருல் ஷிரோவிற்கு, பள்ளியிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்த போது தான், அதனை அவர் உணர்ந்துள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில்,
ஷாருல் ஷிரோ தனது டிக் டொக்கில் பதிவேற்றம் செய்துள்ள காணொளி வைரலாகி, நகைச்சுவையான கருத்துகளை பெற்று வருகிறது.