Latestமலேசியா

மகாதீருக்கு எதிராக போலீசில் புகார்

கோலாலம்பூர், ஜன 15- நாட்டின் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்திற்கு மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்ட  துன் டாக்டர் மகாதீருக்கு எதிராக  போலீசில்  புகார் செய்யப்பட்டுள்ளது. மகாதீருக்கு எதிராக தாமும் தமது நண்பர்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக தீபன் தெரிவித்தார். தென் கிள்ளான் போலீஸ் நிலையத்தில்,  நேற்று தாங்கள் இந்த போலீஸ் புகாரை செய்திருப்பதாக தீபன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.  

அண்மையில் தந்தி டிவிக்கு வழங்கப்பட்ட பேட்டியில்  மலேசிய இந்திய மற்றும் சீன சமுகத்தினர் நாட்டிற்கு விசுவாசமானவர்களாக இல்லையென்று மகாதீர் கூறியிருந்தது  குறித்து போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் தேசிய மன்ற உறுப்பினருமான  தீபன் சுப்ரமணியம் தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!