கோத்தா சமரஹான் , ஜன 30 -கோத்தா சமரஹானில் சுங்கை பத்தி ஆற்றில்கம்போங் ரிம்பா பாடியில் மக்களின் உயிருக்கு பெரும் மிரட்டலாக இருந்த 400 கிலோ எடையுள்ள ஆண் முதலை பிடிபட்டது. பொதுமக்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த முதலையை வேட்டையாடுவதற்காக சரவா காட்டுவள கழக அதிகாரிகள் சுங்கை பத்தி ஆற்றில் இரண்டு பொரிகளை வைத்தனர். அந்த பொரிகளில் ஒன்றில் முதலை சிக்கியதைத் தொடர்ந்து உடனடியாக அந்த முதலையை அப்புறப்படுத்தும்படி சரவா காட்டுவள அதிகாரிகளை கிராம தலைவர் கேட்டுக்கொண்டார். 5 அடி நீளத்தை கொண்ட அந்த முதலை சட்டப்பூர்வ லைசென்ஸ் பெற்ற முதலை வாங்குபவரிடம் விற்பனை செய்யப்பட்டது
Related Articles
Check Also
Close