கோலாலம்பூர், நவ 24 – மன வளர்ச்சி குன்றிய தன் மலாய் தோழிக்கு மஹாலெட்சுமி எனும் மாணவி உணவை ஊட்டிவிடும் காணொளி சமூக வளைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அம்மாணவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 30 விநாடிகள் கொண்ட அக்காணொளியில் மஹாலெட்சுமி தன் பள்ளியின் சிற்றுண்டிச்சாலையில் ஓய்வு நேரத்தின்போது உணவை ஊட்டிவிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
உணவை ஊட்டும்போது தன் மலாய் தோழியோடு அவர் அளவுலாவுவதையும் பார்க்க முடிகிறது.
அன்போடு மஹாலெட்சுமி ஊட்டும் காட்சி, அவரது பரிவையும் தன் தோழி மீதுக் கொண்ட உண்மையான அக்கரையையும் காட்டுகிறது. இனம் சமயத்துக்கு அப்பாற்பட்டு உண்மையான அன்பை பறிமாரிக்கொள்ளும் மஹாலெட்சுமியின் இந்த செயல் சமூக ஊடகங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.