அம்பாங், பிப் 11 – நேற்று அம்பாங் பண்டான் இண்டாவில் சாலை சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பாகிஸ்தானியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
55 மற்றும் 65 வயதுடைய அந்த இருவரையும் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் கீழ் போதைப்பொருள் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான முகமட் சாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் RM 10,000 ரிங்கிட் முதல் RM 30,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், ஓட்டுநர் உரிமமும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்துவதிலிருந்து தடுத்து வைக்கப்படும் என்றும் கூறினார்.