Latestமலேசியா

மரம் விழுந்ததால் காயம் அடைந்த சுவிடன் பெண் இன்னமும் மருத்துவ சிகிச்சையை பெற்று வருகிறார்

கோலாலம்பூர், மே 8 – Jalan Sultan Ismail லில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து உடலில் பல பகுதிகளில் காயத்திற்கு உள்ளான சுவிடனைச் சேர்ந்த பெண் ஒருவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த 72 வயது பெண்மணியின் நிலை சீராக இருப்பதாக Dang Wangi துணை OCPD Supt Nazron Abdul Yusof தெரிவித்தார். நேற்று நிகழ்ந்த அந்த சம்பவத்தில் காயம் அடைந்த 26 வயதுடைய ஆடவர் ஒருவர் இன்று காலை 6 மணியளவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார். அந்த சம்பவத்தினால் தங்களது வாகனங்கள் சேதமடைந்தது தொடர்பில் 18 புகார்களை போலீஸ் பெற்றதாக Nazron கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!