போரூர், டிச 11 – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 18ஆம் திகதி விஜயகாந்த் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், 21 நாட்களுக்குப் பின்னர் உடல்நலம் சீரானதை தொடர்ந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.