Latestமலேசியா

மருத்துவ அலட்சியம் மீதான வழக்கு முன்னாள் தேசிய ஹாக்கி விளையாட்டாளர் அவ்தார் சிங்கிற்கு ரி.ம 335,000 இழப்பீடு

கோலாலம்பூர், நவ 15 – மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த தனது மனைவியின் வாரிசுதாரர் என்ற முறையில் முன்னாள் தேசிய ஹாக்கி வீரர் அவ்தார் சிங் மருத்துவ அலட்சியம் தொடர்பாக இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில் மொத்தம் 335,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மனைவி சலிண்டர் கவுரை பரிசோதித்து, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது கவனக்குறைவு இழப்பீடு கோரிக்கை தொடர்பாக அவ்தார் சிங்தொடுத்திருந்த வழக்கு மனுவை அனுமதித்து நீதித்துறை ஆணையர் டத்தோ ராஜா அஹ்மாட் மொசனுடின் இந்த தீர்ப்பை தெரிவித்தார்.

வாதி Avtar Singh கிற்கு பொது இழப்பீடாக 234,624.09 ரிங்கிட், இழப்பீடாக 100,000 ரிங்கிட் மற்றும் செலவு தொகையான 40,000 ரிங்கிட் வழங்கும்படியும் நீதிபதி டத்தோ ராஜா அஹ்மாட் மொசனுடின் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பு படுத்த படுக்கையாக இருந்ததால் இழப்பீடு தொகை நியாயமானது என ராஜா அஹ்மாட் தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!