மலாக்கா, பிப்ரவரி 16 – பத்து லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய, செம்பனை தோட்ட குத்தகை ஒப்பந்தம் தொடர்பில், நிர்வாக இயக்குனர் ஒருவரை ஏமாற்றியதாக, டிரக் ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக இன்று மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 39 வயது எம். கோபால கிருஷ்ணன் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
செம்பனை தோட்டத்திற்கான குத்தகையை பெற முடியும் என கூறி, அவன் 69 வயது யாப் கோ செங் எனும் நபரை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம், மலாக்கா, அலோர் காஜாவில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக கூறப்படுகிறது.
கோபால கிருஷ்ணனை இன்று பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாதத்தில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.