Latestஉலகம்

மலேசியாவிற்கு வெளியே பிறக்கும் குழந்தைகளின் உரிமை விவகாரம் ; அரசாங்கம் தீர்வுக் கண்டு வருகிறது

பெர்லின், மார்ச் 13 – மலேசியாவிற்கு வெளியே பிறக்கும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வுக் கண்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மலேசியாவிற்கு வெளியே பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான, அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு, உட்பிரிவு (1)(பி)-யை திருத்தம் செய்வது மீதான தீர்மானத்தை இம்மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

அந்த திருத்தம், அப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்சமயம் பெற்றோர் என்றால் தந்தை என மட்டும் பொருள்படுகிறது. அதனை, தாய் அல்லது தந்தை என பொருள்படும் வகையில் திருத்தம் செய்யவுள்ளதாகவும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

ஜெர்மனி, பெர்லினில், மலேசிய பேராளர்களுடனான இரவு உணவு விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர், பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!