Latestஇந்தியா

மஹாராஷ்டிராவில், சொந்த மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று, சடலத்தை கால்வாயில் வீசிய ஆடவன் கைது

புது டெல்லி, பிப்ரவரி 2 – இந்தியா, மஹாராஷ்டிரா மாநிலத்தில், சொந்த மகனுக்கு ஈவு இரக்கமின்றி விஷம் கொடுத்து கொன்று, சடலத்தை வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் வீசிய ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.

கைப்பேசியில் ஆபாச படங்களை பார்த்ததாலும், பள்ளியிலிருந்து அடிக்கடி புகார் கிடைத்தாலும், தையல்காரனாக பணிப்புரியும் விஜய் பட்டு எனும் அவ்வாடவன் தனது 14 வயது மகன் விஷாலுக்கு விஷம் கொடுத்து கொன்றதாக கூறப்படுகிறது.

முதலில் அக்கொலையை அவ்வாடவன் மறைத்துள்ளான்.

எனினும், ஜனவரி 13-ஆம் தேதி, மகனை காணவில்லை என அவனும் அவனது மனைவியும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, விசாரணையில் அந்த கொடூர செயல் அம்பலமானது.

அதோடு, மகனை கொன்ற குற்றச்சாட்டை விஜய் ஒப்புக் கொண்டதை அடுத்து அவன் கைதானான்.

ஜனவரி 13-ஆம் தேதி, தனது மகனை வெளியில் அழைத்துச் சென்ற விஜய், விஷம் கலந்த சுவை பானத்தை மகனுக்கு குடிக்க தந்துள்ளான்.

அதனை குடித்தவுடன் சுயநினைவை இழந்த மகனின் உடலை பின்னர் அவன் கால்வாயில் வீசியதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!