
கோலாலம்பூர் – ஜூன் 13 – சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தை கொண்ட இணைய பக்கங்களை எதிர்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தைப் பகிரும் சமூக ஊடக பக்கங்களின் கணக்கைக் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் வேண்டும் என்று அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறியுள்ளார்.
இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த, சமூக சுகாதார கல்வி வழிகாட்டுதல்களை மலேசிய கல்வி அமைச்சு ஏற்கனவே செயல்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளைக் கையாள்வதில் அனைத்து கல்வி அமைச்சு நிறுவனங்களும் தற்போதைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் சமூக ஊடக பிரபலம் வீ யுன் நீ தன்னுடைய இளைய வயது புகைப்படங்களை அனுமதியின்றி பதிவேற்றிய பேஸ்புக் குழு ஒன்றை கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.