Latestமலேசியா

மாற்றுத்திறனாளியான 13 வயது மகளுக்கு பிரசவம்; கற்பழிப்புக் குற்றத்தின் பேரில் சொந்தை தந்தையே கைது

டுங்குன், ஜூலை-22, திரங்கானு டுங்குனில், வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் அளவுக்கு 13 வயதே நிரம்பிய மகளைக் கற்பழித்த சந்தேகத்தின் பேரில் கொடூர தந்தை கைதாகியுள்ளார்.

இதில், பதின்ம வயது அப்பெண் ஒரு மாற்றுத்திறனாளி என்பது இன்னும் வேதனையாகும்.

டுங்குனில் உள்ள கிளினிக்கில் சனிக்கிழமை இரவு மகளுக்கு பிரசவம் நடைபெற்ற போதே, தந்தையின் குட்டு அம்பலமானது.

அடிவயிறு வலிப்பதாகக் கூறியதால் மகளை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்ற தாய்க்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

மகளைப் பரிசோதித்த மருத்துவர், அவர் நிறைமாத கர்ப்பிணியென உறுதிபடுத்தியதால் தாய் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்.

சற்று நேரத்தில் மகளுக்குக் குழந்தையும் பிறந்தது.

தாயும் சேயும் மேல் நடவடிக்கைக்காக டுங்குன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மகளுக்கு 12 வயதாக இருக்கும் போதிலிருந்தே அவரை தந்தை கற்பழித்து வந்திருப்பது போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடல் உழைப்புத் தொழிலாளியான 45 வயது அந்நபர், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே குற்றப்பதிவைக் கொண்டிருப்பதும் உறுதியானது.

குற்றவியல் சட்டத்தின் கற்பழிப்புக் குற்றத்திற்கான 376-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!