கோலாலம்பூர், பிப் 8 – பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான N. சுரேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகினார். வாக்குறுதி அளிக்கப்பட்டதைப்போல் சீரமைப்புகளை செய்வதில் பி.கே.ஆர் தவறியதால் தாம் அக்கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக படாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் X சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப சீரமைப்புகள் தேவை என தாம் வலியுறுத்தியும் அதற்கு முறையான பதில் வழங்கப்படவில்லை. மாற்றங்கள் மற்றும் சீரமைப்புக்கு வழியில்லை என்பதால் இனியும் பி.கே.ஆர் கட்சியில் உறுப்பினராக இருப்பதில் பயன் இல்லையென சுரேந்திரன் தெரிவித்தார். கருத்தை வெளியிடும்போது கட்சியின் கட்டொழுங்கை கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகும் முடிவை சுரேந்திரன் அறிவித்திருக்கிறார்.
Related Articles
Check Also
Close