Latestமலேசியா

மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் தாயகத்திற்கு கொண்டுவருவதற்கு சீனா உதவும்

கோலாலம்பூர், நவ 19 – மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் சீனாவின் உதவியோடு பாதுகாப்பாக மலேசியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என வெளியுறவு துணையமைச்சர் முகமட் ஆலமின் தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களையும் மியன்மாரிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை திட்டமிட்டபடி சீராக நடைபெறுவதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தி வருவதாக அவர் கூறினார். அண்மையில் துணைப்பிரதமர் ஃபதில்லா யூசுப் சீனாவுக்கு மேற்கொண்ட வருகையின்போது இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு இணக்கம் காணப்பட்டது குறித்து வெளியுறவு அமைச்சு மகிழ்ச்சி அடைவதாகவும் முகமட் ஆலமின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!