கிளந்தான், டிசம்பர் 13 – மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் தமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த 112 வயது மூதாட்டி ஒருவர்.
ஏற்கனவே 7 முறை திருமணம் செய்திருக்கும் சித்தி ஹவ்வா ஹீலினுக்கு 4 பிள்ளைகள், 19 பேரப் பிள்ளைகள், 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதனிடையே இப்போது வரன் வந்தால் தான் நிராகரிக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அவரின் கணவர்களில் சிலர் இறந்துவிட்டதாகவும், சிலரை விவாகரத்துச் செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்வின் ரகசியம் என்ன என கேட்டதற்கு, உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வதும் சோற்றில் குழம்பைச் சேர்த்துக் கொள்ளாததும், தூய்மையான குடிநீர்தான் என்கிறார் அவர்.
அப்புறம் என்ன? உடல் திடகாத்திரமாக இருக்க இன்னும் ஒரு திருமணம் செய்யலாமே என வலைத்தளவாசிகள் பாட்டிக்கு உற்சாகமூட்டி வருகின்றனர்.