நீலாய் நவ 23 – நீலாயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், கணவர், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்த குடும்பம் ஒன்று முகமூடி அணிந்து, கையில் துப்பாக்கி, பாராங் கத்தி மற்றும் அரிவாளுடன் ஆறு பேர் வீட்டில் புகுந்ததைத் தொடர்ந்து பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.
வீட்டில் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த கணவர் முழித்து பார்க்கும்போது, பாராங் கத்தி ஏந்தியவர் தன்னை நோக்கி நின்று கொண்டிருந்ததாகவும், குடும்பத்தினரின் கை கால்களை கட்டிபோட்டுவிட்டு வீட்டிலிருந்த 40 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பணம் மற்றும் நகையை களவாடி சென்றதாகவும் போலீசிடம் புகார் அளித்தார்.
இக்கொள்ளைச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இதுகுறித்து போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளது.