மூவார், டிசம்பர் 28 – ஜோகூரில், அறிவுத்திறன் குறைப்பாடுடைய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரை, காரில் வைத்து கற்பழித்ததாக கூறப்படும், தோட்டக்காரன் ஒருவனுக்கு எதிராக இன்று மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 45 வயது நில்ஹகிம் காசிம் எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
சாலையோரத்தில், நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் அவன் அந்த ஒன்பது வயது மாற்றுத் திறனாளி மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட ஆடவனை இன்று உத்தரவாததில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இவ்வழக்கு விசாரணை ஜனவரி 16ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, கடந்தாண்டு, அம்மாணவி பயிலும் பள்ளியில் தோட்டக்காரனாக வேலை செய்த போது, அவரை காரில் வெளியில் அழைத்து செல்வதாக கூறி அவன் அந்த வன்கொடுமையை புரிந்ததாக கூறப்படுகிறது.
எனினும், கடந்த வாரம் தான் அம்மாணவி அது குறித்து தனது வளர்ப்பு தாயாரிடம் தெரிவித்த வேளை ; பின்னர் அவர்கள் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவன் கைதுச் செய்யப்பட்டான்.