![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-11-Mar-2024-06-03-PM-1992.jpg)
இஸ்ரேல், மார்ச் 11 – கடத்த வந்த ஹமாஸ் வீரர்களிடம், பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் பெயரை சொல்லி, இஸ்ரேலில் வசிக்கும் மூதாட்டி தப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 பேர் அந்த மூதாட்டி வீட்டிற்குள் நுழைந்தபோது, நான் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அதற்கு “அர்ஜென்டினா என்றால் என்ன?” என ஹமாஸ் வீரர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூதாட்டி உடனடியாக “நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா? அதில் வரும் கால்பந்து வீரர் மெஸ்சியின் ஊர்தான் என்னுடைய ஊரும்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த ஹமாஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்ஃபி ஒன்றையும் எடுத்து சென்றுள்ளார்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.