கூச்சிங், பிப் 19 – மேலவையின் புதிய தலைவராக டத்தோ Mutang Tagal’s நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகலில் Mutang Tagal மேலவை உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டதோடு மேலவை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஒரு வழக்கறிஞருமான Libat மேலவை தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என கூறப்பட்டது. கிராம பின்னணியைக் கொண்ட அவர் கடும் உழைப்பினால் உயர்ந்தவர் என சரவா தலைவர்கள் வருணித்தனர்.
அவரது நியமனம் சரவா டயாக் சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என டயாக் வாணிக தொழில் சம்மேளம் தெரிவித்துள்ளது. மேலவைத் தலைவராக டயாக் சமூகத்தை சேர்ந்த முதல் நபர் நியமிக்கப்பட்டிருப்பது புதிய வரலாறு என டயாக் வாணிக தொழில் சம்மேளனத்தின் தலைமை செயலாளர் Libat Langub தெரிவித்தார்.