![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-19-Dec-2023-08-31-PM-5284.jpg)
கோலாலம்பூர், டிச 19 – இன்று பிற்பகலில் கோலாலம்பூர் மோனோரயில் (KL Monorail) டயரில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அதனை அணைப்பதற்காக வரவழைக்கப்பட்டனர். இன்று நண்பகல் மணி 12.57 அளவில் தீ குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கோலாம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஜாலான் துன் ரசாக்கிலுள்ள தித்திவங்சா நிலையத்திற்கு தீயணைப்பு குழு அனுப்பிவைக்கப்பட்டது. மோனோரயிலின் டயரில் தீ பிடித்ததைத் தொடர்ந்து கீழ்ப் பகுதியிலிருந்து அந்த டயர் சாலையில் சென்று விழுந்தது. எனினும் அந்த டயரின் தீயை தீயணைப்பு வீரகள் வெற்றிகரமாக அணைத்தனர். இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.