கோலாலம்பூர், நவ 9 – ம.இ.காவின் 77ஆவது பேராளர் மாநாடு அடுத்த வாரம் நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை செர்டாங், மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 1,500 பேராளர்கள் கலந்துகொள்ளும் இந்த பேராளர் மாநாடு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறும்.
இந்திய சமூகத்தின் முக்கிய பிரச்னைகளாக கருதப்படும் கல்வி, பொருளாதாரம் உட்பட பல்வேறு விவகாரங்களை அரசி ஆராயும் களமாக அமையும் ம.இ.கா மாநாட்டில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அனைத்து பேராளர்களுக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கேட்டுக்கொண்டார்.