வில்மிங்டன், பிக் 12 – ரஃபா நகரிலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். ரஃபாவில் அடைக்கலமாகியிருக்கும் சுமார் 10 லட்சம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான திட்டத்தை அமல்படுத்தாதவரை அங்கு ராணுவ நடவடிக்கை எடுப்பதை இஸ்ரேல் அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். காஸா முனையில் இஸ்ரேல் பல நாட்களாக மேற்கொண்டுவரும் பதிலடி தாக்குதல் கவலை அளிப்பதாக இதற்கு முன் அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஜோ பைடன் னுக்கும் நெதன்யாகுவுக்குகிடையே சுமார் 45 நிமிடம் தொலைபேசியில் பேச்சு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
19 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
19 hours ago