![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-28-Jun-2024-10-24-AM-9743.jpg)
மோஸ்கோவ், ஜூன்-28, வட ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
50 பேர் வரை காயமடைந்திருக்கலாம்; அவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புதன்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் ரயிலின் 14 பெட்டிகளில் 9 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.
இருவரின் சடலங்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டன; ஒருவரைக் காணவில்லை என அதிகாரிகள் கூறினர்.
சம்பவத்தின் போது 200 பயணிகள், 20 பணியாளர்கள் ஆகியோரை ரயில் ஏற்றியிருந்தது.
கனமழையால் தண்டவாளம் பாதிக்கப்பட்டதே அவ்விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.