Latestமலேசியா

ரெம்பாவில், சொந்த தங்கையை அடித்து காயப்படுத்திய சகோதரனுக்கு ; ஐந்து மாதச் சிறைத் தண்டனை

ரெம்பாவ், மார்ச் 27 – சொந்த தங்கையை தாக்கி காயப்படுத்திய ஆடவன் ஒருவனுக்கு, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஐந்து மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

36 வயது பிர்டாவுஸ் முஹமட் காலில் எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.

வேண்டுமென்றே தனது இளைய சகோதரியான 33 வயது ஷஹிடாவை, கையால் தலையின் பின்புறத்தில் இருமுறை குத்தி காயம் ஏற்படுத்தியதாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.

இம்மாதம் 23-ஆம் தேதி, மாலை மணி 6.30 வாக்கில், கோத்தாவிலுள்ள, தமது வீட்டில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.

கடந்த மூன்றாண்டுகளாக தம்மிடம் பேசாத தங்கை மீது கொண்ட கோபத்தால், அவன் அப்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இம்மாதம் 24-ஆம் தேதி, அவ்வாடவன் கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து, அவனது சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாகவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!