அலோர் ஸ்டார், மார்ச் 7 – கெடா, லங்காவியில், இனி உடம்பு பிடி நிலையத்தை திறப்பதற்கான புதிய அனுமதி எதுவும் வெளியிடப்படாது.
அந்த சுற்றுலாத் தீவில், ஒழுங்கீன செயல்களை தவிர்க்க கெடா அரசாங்கம் அம்முடிவை எடுத்துள்ளதாக, மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஜாகாரியா தெரிவித்தார்.
எனினும், தற்சமயம் அங்குள்ள உடம்பு பிடி நிலையங்கள், ஊராட்சி மன்றத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வழக்கம் போல செயல்படலாம் என்றாரவர்.
லங்காவியில், தற்சமயம் 41 பாரம்பரிய உடம்பு பிடி நிலையங்கள், 30 ரெப்லெசலோஜி, 17 முக ஒப்பனை நிலையங்கள், 31 சிகை அலங்கார நிலையங்கள், 16 குளிர் ஸ்பாக்கள், மூன்று நக சீர் மையங்கள், இரு அழகு நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.