கோலாலம்பூர், நவ 3 – காசாவில் நடந்த போரைத் தொடர்ந்து இஸ்ரேல் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட லிபரல் இன்டர்நேசனல் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை என்று பிகேஆர் மறுத்துள்ளது. லிபரல் இன்டர்நேசனலுடன் பி.கே.ஆர் கட்சியை இணைத்து சில தரப்பினர் வேண்டுமென்றே மேற்கொள்ளும் பிரச்சார முயற்சிகளை பி.கே. ஆர் தகவல் பிரிவுத் தலைவர் பாமி பாட்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லிபரல் இன்டர்நேசனலின் உறுப்பினராக பி.கே. ஆர் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை தாம் உறுதிப்படுத்துவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் பாமி குறிப்பிட்டுள்ளார். பி.கே. ஆர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முழு ஒற்றுமையுடன் நிற்கிறது. பாலஸ்தீன மக்களை தொடர்ந்து ஒடுக்கி, துன்புறுத்தி, கொல்லும் இஸ்ரேல் ஆட்சியின் மிருகத்தனமான நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறது என்று அவர் கூறினார்.