Latestமலேசியா

லீக் காற்பந்து ஆட்டத்தின்போது கைகலப்பு; அறுவர் கைது

கோலாலம்பூர், ஜன 20 – திரெங்கானு லீக் காற்பந்து போட்டியின் ஆட்டத்தின்போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் அரசு ஊழியர்க உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர். இந்த தகராறு தொடர்பான காணொளி வைரலானது மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் காற்பந்து ரசிகர்கள் வீடியோ எடுத்ததன் தொடர்பில் 25 முதல் 40 வயதுடைய அந்த ஆறு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு போலீஸ் தலைவர் மஸ்லி மஸ்லான் தெரிவித்தார். கைகலப்பு மற்றும் காயம் அடைந்த அந்த சம்பத்தில் அறுவர் மட்டுமே சம்பந்தப்பட்டதால் அவர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை அறிக்கை முழுமையடைந்துவிட்டதோடு மேல் நடவடிக்கைக்காக புக்கிட் அமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சமுக வலைத்தளங்களில் வைரலான 22 மற்றும் 43 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளிகளில் விளையாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நிகழ்ந்த தகராறில் ஆடவர் ஒருவர் கீழே விழுவது மற்றும் அவர் உதைக்கப்படும் காட்சியை காணமுடிவதாக மஸ்லி மஸ்லான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!