கோலாலம்பூர், நவ 22 – மிகவும் பரபரப்பான சாலை நடுகே பேருந்து செல்ல இடமில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பொதுமக்கள் சிலர் ஒன்று சேர்ந்து நகற்றி வைத்த காணொளி வைரலாகியுள்ளது.
நேற்று நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி பலரின் கண்டனத்தை பெற்று வருகிறது.
பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நீல நிற பெரோடுவா பெஸ்ஸா கார் பின்னர் போலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டது.