Latestமலேசியா

லோரி விபத்துக்குள்ளானது ; வெளியேற முடியாமல், 15 நிமிடங்களுக்கு வலியால் துடித்த ஓட்டுனர் பாதுகாப்பாக மீட்பு

கிள்ளான், நவம்பர் 3 – காப்பார் டோல் கட்டண சாவடிக்கு அருகே லோரி ஒன்று சுற்றுலா பேருந்தை மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதன் ஓட்டுனர் லோரியிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுனர் இருக்கையிலேயே சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இன்று காலை மணி 11 வாக்கில், அவ்விரு வாகனங்களும் ஷா ஆலாம் நோக்கி பயணமான போது அவ்விபத்து நிகழ்ந்ததை, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.

லோரி, சுற்றுலா பேருந்தை மோதி விபத்துக்குள்ளானது. அதனால் ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்ட அதன் ஓட்டுனர், சுமார் 15 நிமிடங்களுக்கு வலியால் துடிக்கும் நிலை ஏற்பட்டது.

எனினும், இறுதியில் தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட அவர் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!