Latestமலேசியா

வங்காளதேசத்தின் பிரதமராக ஹசீனா மீண்டும் வெற்றி; ‘போலி தேர்தல்’ என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

டாக்கா, ஜனவரி 8 – 76 வயது ஷேக் ஹசீனா, தொடர்ந்து ஐந்தாவது தவணையாக, வங்காளதேசதின் பிரதமராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்தின் பொதுத் தேர்தலை, அந்நாட்டின் எதிர்கட்சிகள் நிராகரித்ததை தொடர்ந்து, ஹசீனா எளிதாக தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் வாயிலாக, உலகில் மிக நீண்ட காலம் ஒரு நாட்டின் உயர்மட்ட பதவியை வகிக்கும் பெண்ணாக ஹசீனா திகழ்கிறார்.

வாக்குப் பதிவு 40 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தாலும், ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

ஒரு காலத்தில், வறுமையில் பிடியில் சிக்கியிருந்த வங்காளதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய கடப்பாட்டை ஹசீனாவின் அரசாங்கம் கொண்டிருந்தாலும், எதிர்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையையும், கொடூரமான மனித உரிமை மீறல்களையும் அது கையாள்வதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், கடுமையான போட்டி எதுவும் இன்றி, 300 நாடாளுமன்ற தொகுதிகளில், 220 தொகுதிகளை இலகுவாக கைப்பற்றி ஹசீனாவின் அவாமி லீம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!