Latestமலேசியா

வங்சா மாஜுவில், வாடகை வீட்டின் கட்டிலில் இருந்து அழுகிய நிலையில் ஏமன் மாணவரின் சடலம் கண்டெடுப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 8 – தலைநகர், வங்சா மாஜு, ஜாலான் மெட்ரோ புடு 2-டில், அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, வாடகை வீடொன்றில், தனியார் கல்லூரி மாணவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலை தொடர்ந்து, ஏமன் நாட்டைச் சேர்ந்த அந்த 24 வயது மாணவரின் சடலம் நேற்று மாலை மணி ஐந்து வாக்கில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த சடலம் மீட்கப்பட்டு, சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை, டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அசாரி அபு சாமா உறுதிப்படுத்தினார்.

அவர் இறந்ததற்கான காரணம், சவப்பரிசோதனைக்கு பின் தெரிய வருமென அசாரி தெரிவித்தார்.

தற்சமயம், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!