வெலிங்டன், ஏப் 21 , நியூசிலாந்தில், செம்மறி ஆட்டுப் பண்ணையில் வயதான தம்பதி இறந்ததற்கு காரணமாக இருந்த செம்மறி ஆண் ஆடு ஒன்றை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஏப்ரல் 18 ஆம் தேதி காலை மேற்கு ஆக்லாந்தில் நடந்த ஒரு சம்பவத்தில் அந்த தம்பதியர் இறந்து கிடந்தனர். அவர்களது மரணத்திற்கு செம்மறி ஆடு ஒன்றே காரணம் என தெரியவந்தது. Paddock ஆட்டுப் பண்ணையில் அந்த செம்மறி ஆடு இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்தோம் என நியூசிலாந்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
தொழுவத்தில் இருந்த அந்த செம்மறி ஆடு தாக்கியதில் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் போலீசார் கூறினர். அதோடு தங்களது உறுப்பினர்களையும் அந்த ஆடு தாக்க முன்வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அந்த செம்மறி ஆட்டின் ஆபத்தை மதிப்பீடு செய்தபின் அது சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆடு தாக்கியதில் 80 வயது மதிக்கத்தக்க தம்பதியர் மரணம் அடைந்ததோடு ஏப்ரல் 19 ஆம் தேதி அந்த தம்பதியரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர்களது உறவினர் தெரிவித்தார்.