புத்ரா ஜெயா, ஏப் 27 – மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும்
சிலாங்கூர், கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்கள் அதிருப்பதியை காட்டுவதற்கு இது நேரம் அல்ல, மாறாக அவர்கள் விவேகமாக தங்களது சரியான செய்தியை தெரிவிக்க வேண்டுமென ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். தங்களது எதிர்காலத்திற்கு உதவக்கூடிய அதிகமான வாய்ப்புக்களை உருவாக்கியிருப்பதால் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
கோலாகுபுபாருவில் இன்னும் தீர்க்கபடாத சில பிரச்சனைகள் இருப்பதோடு அதனால் சில வாக்காளர் அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருப்பதை
ம.இ.கா உணர்ந்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதே வேளையில் அரசாங்க வேட்பாளர் தோல்வி கண்டால் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அல்லது அன்வார் இப்ராஹிம் பிரதமராக இருப்பதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று புத்ரா ஜெயாவில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிபோது விக்னேஸ்வரன் தெரிவித்தார்.