Latestமலேசியா

வான்குடை திறக்கவில்லை ; கமாண்டோ பதற்றம்

கோலாலம்பூர், மார்ச் 12 – பஹாங், குவந்தானில் அண்மையில் நடைபெற்ற, பாஸ்காவ் எனப்படும் சிறப்பு விமானப் படையின் பயிற்சியின் போது, கமாண்டோ ஒருவர் பதற்றமான தருணத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

அவர் பொருத்தியிருந்த வான் குடை திறக்காமல் செயலிழந்ததே அதற்கு காரணம் ஆகும்.

பொதுமக்கள் பதிவுச் செய்தது என நம்பப்படும் அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த வான் குடை செயலிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும், சம்பந்தப்பட்ட காமண்டோ அதிஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பாதுகாப்பாக இலக்கை அடைந்தார்.

ஆகாயப்படை, தரைப்படை மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் அந்த சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!