கெப்பாளா பத்தாஸ், டிச 17 – பினாங்கு ஜாலான் பெர்மாதாங் பாருவில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மதுபோதையில் BMW கார் ஓட்டியதாக நம்பப்படும் அதன் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்காக தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதற்காக 46 வயதுடைய அந்த ஆடவர் நேற்று பட்டர்வெர்த் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அதிகாலை மணி 2.30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தின்போது கட்டுப்பாட்டை இழந்த BMW கார் எதிரே வந்த சாலைப்பகுதியில் நுழைந்ததைத் தொடர்ந்து இரண்டு ஆசிரியர்கள் இருந்த காரில் மோதியது.
BMW காரை ஓட்டிவந்த ஆடவர் பட்டர்வெர்த் சுங்கை லோகன் பகுதியிலிருந்து கெபாளா பத்தாஸ்சை நோக்கி வந்ததாக கூறப்பட்டது. அதே வேளையில் புரோடுவா மைவி காரில் வந்த அந்த இரண்டு ஆசிரியர்களும்கெபாளா பத்தாசிலிருந்து சுங்கை லோகன் சென்று கொண்டிருந்ததாக வட செபராங் பெராய் இடைக்கால போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டன் சிதி நோர் சலவதி சாத் கூறினார்.