Latestஉலகம்

வியட்நாமுக்கு பயணமான ஏர் ஆசியா விமான பயணிகளின் பணம், கிரெடிட் கார்ட்டுகள் களவு ; திருடர்கள் வசமாக சிக்கினர்

ஹோ சி மின் சிட்டி, ஜூலை 19 – கோலாலம்பூரிலிருந்து, வியட்நாம், ஹோ சி மின் நகருக்கு பயணமான, ஏர் ஆசியா விமானத்தில், மூன்று பயணிகளின் ரொக்கப் பணம் மற்றும் கிரெடிட் கார்ட்டுகளை திருடிய, சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, Ifg.travel எனும் இஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலில், நபர் ஒருவர், தாங்கள் அமர்ந்திருக்கும் பகுதியில், மேல் அடுக்கில் வைக்கப்பட்டிருந்த பயணப் பெட்டியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்வதை, பயணிகள் சிலர் பார்த்துள்ளனர்.

அதன் பின்னரே, தங்களின் ரொக்கப் பணமும், கிரெடிட் கார்ட்டுகளும் காணாமல் போனதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

அதன் பின்னர், காலுறையில் சுற்றப்பட்டு கிடக்கும், பெரிய தொகையிலான பணத்தை, சம்பந்தப்பட்ட விமானத்தின் பணிப்பெண் ஒருவர் கண்டெடுக்கும் காட்சியும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

ஹோ சி மின் நகரிலுள்ள, Tan Son Nhat விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியதும், சம்பந்தப்பட்ட பயணிகளும், சந்தேக நபர்களும் உடனடியாக விசாரணக் அறைக்கு கொண்டு செல்லபட்டனர்.

விசாரணையில், உலகம் முழுவதும் பயணிக்கும் விமானங்களில், அந்த திருட்டுக் கும்பலை சேர்ந்த நால்வர், அன்றாடம் களவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இவ்வேளையில், வைரலாகி இருக்கும் அச்சம்பவம் தொடர்பான காணொளிக்கு கீழ், இணையவாசிகள் பலர் தங்களுக்கு நேர்ந்த அதே போன்ற அனுபவங்களை பதிவிட்டு வரும் வேளை ; விமான பயணத்தின் போது அதுபோன்ற திருட்டுகள் வழக்கம் தான் என்பதால், தனிப்பட்ட உடமைகளை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ளுமாறு சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!