தெலங்கானா, பிப்ரவரி-19 – தென்னிந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் விருந்தில் கறி இல்லை என்பதால் மூண்ட சண்டையில் ஒரு திருமணமே நின்று போனது.
பெண் வீட்டு சீதனம், திருமண விருந்தில் பரிமாற்றப்பட வேண்டிய உணவுகள் என எல்லாமே ஏற்கனவே இரு வீட்டார் சார்பிலும் பேசி முடிக்கப்பட்டு விட்டது.
ஆனால், திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் திடீரென கறி எங்கே என கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கறிக்காக இரு வீட்டாரும் கைகலந்து, கடைசியில் போலீஸ் வந்து தலையிட வேண்டிய அளவுக்குப் போய் விட்டது.
போலிசே சமாதானம் செய்ய முயன்றும், இரு வீட்டாரும் இறங்கி வருவதாக தெரியவில்லை.
கடைசியில், வேறு வழியின்றி திருமணத்தை அங்கேயே நிறுத்தி விட்டு இரு வீட்டாரும் கிளம்பிச் சென்றனர்.
வரதட்சனை, பெண் வீட்டு சீதனம் போன்ற காரணங்களால் திருமணம் நின்றுப் போனதைக் கேள்விப் பட்டிருக்கின்றோம்; ஆனால் விருந்தில் கறி இல்லை என்பதற்காக திருமணமே நிறுத்தப்பட்டதை இப்போது தான் பார்க்கிறோம் என திருமணத்திற்கு வந்து வெறும் வயிற்றோடு கிளம்பிய விருந்தினர்கள் ஆதங்கத்தில் பேசிக் கொண்டார்களாம்.