![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-31-May-2024-08-58-AM-5996.jpg)
கோலாலம்பூர், மே-31, அண்மையில் கைப்பேசி வீடியோ அழைப்பின் போது இளம் பெண்ணிடம் தனது மர்ம உறுப்பைக் காட்டியும், ஆபாசமாகப் பேசியும் வைரலான சமூக ஊடக பிரபலம் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
27 வயது அந்நபர் புதன்கிழமை பிற்பகல் வாக்கில் கைதானதை வங்சா மாஜூ போலீஸ் உறுதிபடுத்தியது.
ஒரு மாதத்திற்கு முன்னர் தான் Instagram-மில் அப்பெண்ணுடன் அறிமுகம் ஆனவரான அவ்வாடவர், மே 17-ஆம் தேதி whatsapp வீடியோ அழைப்பின் போது அச்சேட்டையைப் புரிந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து போலீசில் அப்பெண் புகார் செய்ய, நேற்று முன்தினம் அந்த Influencer கைதானார்.
வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டதும் போலீஸ் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் ஏற்கனவே சந்தித்துப் பேசியிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முழு விசாரணை நிறைவடைந்ததும், அதன் அறிக்கை மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் கூறியது.
முன் பின் தெரியாதவர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகம் ஆகும் போது சற்று கவனமாகவே இருக்குமாறும் பொது மக்களைப் போலீஸ் கேட்டுக் கொண்டது.