Latestமலேசியா

வெப்பமான வானிலை ; ஜனவரியிலிருந்து இதுவரை 366 பாம்புகளை பிடித்துள்ளது சிரம்பான் APM

சிரம்பான், பிப்ரவரி 26 – நெகிரி செம்பிலான், சிரம்பானில், அதீத வெப்பமான வானிலை காரணமாக, பிடிபடும் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஜனவரி தொடாங்கி இதுவரை, APM – சிரம்பான் பொது தற்காப்பு பிரிவினர் 366 பாம்புகளை பிடித்துள்ளனர்.

அதில் மிக அதிகமாக 256 மலைப்பாம்புகளும், 23 நாகப்பாம்புகளும் பிடிக்கப்பட்டதாக, சிரம்பான் பொது தற்காப்பு பிரிவு அதிகாரி கேப்டன் முஹமட் ரிட்சுவான் முஹமட் புனிரான் தெரிவித்தார்.

பாம்புகள் தொடர்பில், நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்து புகார்கள் கிடைக்கப்பெற்று வருவதையும் முஹமட் ரிட்சுவான் சுட்டிக்காட்டினார்.

மந்தின், லாபு மற்றும் செனாவாங் ஆகிய மாவட்டங்களில் இருந்து இதுவரை அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதுவரை, பிடிபட்ட பாம்புகளில், 2.4 மீட்டர் நீளமும், பத்து கிலோகிராம் எடையையும் கொண்ட மலைப்பாம்பே மிகவும் பெரியது என்பதையும் முஹமட் ரிட்சுவான் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!