பெட்டாலிங் ஜெயா, ஜன 12 – கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர், அம்பாங்கில் வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததோடு உள்ளூரைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்கள்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
20-வது வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட அந்த இரு போலீஸ்காரர்களும், போக்குவரத்து குற்றத்திற்காக தடுத்து நிறுத்திய இரு மாணவர்களை வெவ்வேறு இடத்திற்கு கொண்டு சென்று, ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்றொருவரிடமிருந்து வங்கிப் பணத்தை பறித்துள்ளாதகவும் நம்பப்படுகிறது.
அந்த இரண்டு போலிஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள், மற்றொருவர் லான்ஸ் கார்போரல் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடியும் வரை இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.