புத்ராஜெயா, ஜனவரி 2 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், சாதாரண உடை அணிந்து பள்ளிக்கு செல்ல, கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
வெள்ளத்தில் பள்ளி சீருடை சேதமடைந்திருந்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண உடை அணிந்து பள்ளி வரலாம் என்ற அனுமதியை பள்ளிகள் வழங்க வேண்டுமென, கல்வி அமைச்சர் பஹ்ட்லீனா சீடேக் தெரிவித்தார்.
எனினும், அது பள்ளிக்கு வர ஏற்ற ஆடையாக இருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்வியில் விடுபட்டு போய்விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய அந்த அனுமதி வழங்கப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்வி அமைச்சின் பள்ளிகள் தொடர்பான சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பஹ்ட்லீனா சீடேக் அதனை தெரிவித்தார்.