கோலாலம்பூர், டிச 29 – வெள்ள நெருக்கடியின்போது கிளந்தான் உட்பட மாநில அரசாங்கங்களுக்கும் கூட்டரசு அரசாங்கத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்திருக்கிறார். இறைவன் கருணையால் வெள்ள அகதிகளுக்கு உதவும் நடவடிக்கையில் இரு தரப்புக்கிடையே சுமுகமான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமது முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று பாசீர் மாஸிற்கு வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக தாம் சென்றபோது வெள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாகவும் அவற்றில் ரந்தாவ் பஞ்சாங் சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப் படுகையில் மேம்பாட்டு திட்டமும் அடங்கும் என அன்வார் சுட்டிககாட்டினார். 911 ரிங்கிட் கோடி ரிங்கிட் செலவிலான வெள்ள தடுப்புக்காக ஐந்து திட்டங்கள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அவர் கூறினார். திட்டமிட்ட அனைத்து முயற்சிகளும் மக்களின் பிரச்சனைககளை தீர்ப்பதற்கான நன்மையை கொண்டுவரும் என அவர் தெரிவித்தார்.