கோலாலம்பூர், டிச 20 – நாட்டில் பல இடங்களில் அடை மழை பெய்து வருவதால் வெள்ள நெருக்கடியை எதிர்நோக்குதவற்காக மாநில மற்றும் மாவட்ட நிலையிலான பேரிடர் குழுக்கள் செயல்படுவதற்கு தயாராய் இருக்க வேண்டும் என நட்மா ‘Nadma’ எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளம் ஏற்படகூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஆயத்த நடவடிக்கைக்கு மாநில மற்றும் மாவட்ட பேரிடர் குழுக்கள் தயாராய இருக்க வேண்டும் என நட்மா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
வெள்ள நிவாரண மையங்களாக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மையமும் முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதை உறுப்படுத்திக்கொள்ளும்படி மாநில மற்றும் மாவட்ட நிலையிலுள்ள பேரிடர் குழுக்களை நட்மா கேட்டுக்கொண்டது. இதனிடையே இம்மாதம் 25ஆம் தேதி வரை கிளந்தான், தெரெங்கானு, பகாங்கில் ஜெரான்டுட், குவாந்தான், மற்றும் பெக்கான் ஆகிய இடங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலைத்துறை எச்சரித்தது.