ஈப்போ, பிப் 5 – ஜாலான் தஞ்சோங் ரம்புத்தான் – செமோர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றினால் இரண்டு முறை மோதப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் கடுமையான காயம் அடைந்தார். நேற்றிரவு மணி 7.30 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 34 வயதுடைய போலீஸ்காரர் விலா எலும்பு மற்றும் தோள் பட்டை எலும்பு முறிவுக்கு உள்ளானதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார். குற்றச் செயலை துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் மற்றொரு போலீஸ்காரரை ஏற்றிக்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டடிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.
சாலையோரத்தில் சந்தேகத்துடன் சென்ற நீல நிற புரோட்டான் ஐரிஸ் காரை நெருங்கியபோது அந்த கார் ஓட்டுனர் மோதியதால் அந்த போலீல்காரர்கள் கீழே விழுந்தனர். அந்த கார் அவர்களை இரண்டு மோதிய பின் அங்கிருந்து செமோர், தானா ஹிதாமை நோக்கி சென்றதாக முகமட் யுஸ்ரி தெரிவித்தார். இதனிடையே தப்பியோடிய புரோட்டான் ஐரிஸ் கார் ஓட்டுனரை கண்டறிவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.