Latestமலேசியா

ஷா ஆலாமில், இரட்டை மாடி வீடு தீக்கிரையானது ; ஐவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஷா ஆலாம், ஜூன் 6 – சிலாங்கூர், ஷா ஆலாமில், தீப்பிடித்து எரிந்த இரட்டை மாடி வீடொன்றிலிருந்த ஐவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஷா ஆலாம், செக்‌ஷன் ஒன்பதில் உள்ள அந்த வீட்டில், பின்னிரவு மணி 12.33 வாக்கில் தீ பரவத் தொடங்கியதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் தெரிவித்தார்.

வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள, வரவேற்பு அறையிலிருந்து பரவிய தீயால், அவ்வீடு 30 விழுக்காடு தீக்கிரையானது.

எனினும், சம்பவத்தின் போது அவ்வீட்டில் இருந்த ஆறு வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை, முக்லீஸ் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!