கோலாலம்பூர், பிப்ரவரி 7 – சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள, தாமான் தாசிக் ஏரியில், இன்று காலை மிதந்துவாறு இருந்த சடலம் மீட்கப்பட்டது.
செக்ஷன் 14-கிலுள்ள, ஓய்வுப் பூங்காவிலுள்ள ஏரியில் அந்த சடலம் காணப்பட்டது தொடர்பில், பொதுமக்களிடம் தகவல் கிடைத்ததாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் அந்நிய நாட்டவர் என நம்பப்படும் வேளை ; கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் அடையாள ஆவணம் எதுவும் தென்படவில்லை என்பதையும் இக்பால் உறுதிப்படுத்தினார்.
உயிரிழந்தவரின் கழுத்திலும், இடது கையிலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பது, தடயவியல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட தொடக்க கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.
எனினும், அவர் கைகலப்பில் ஈடுபட்டதற்கான வேறு எந்தவொறு தடயமும் இல்லை என்பதால், அந்நபர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
சடலம் சவப்பரிசோதனைகாக ஷா ஆலாம் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.