கோலாலம்பூர், நவ 30 – கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் ஒரு பள்ளிக்கு அருகே கார் நிறுத்தும் இடத்திற்காக இரு பெண்கள் தகராறில் ஈடுபடும் காணொளி வைரலானது. சிவப்பு நிறத்திலான ஆடை அணிந்திருந்த பெண் ஒருவர் புரோட்டான் எக்ஸோரா காரைச் சேர்ந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபடுவதோடு அவரது கார் ஜன்னல் காண்ணாடியை பல முறை தட்டுகிறார். இதனை தொடர்ந்து சற்று வயதான பெண் ஒருவர் அந்த காரிலிருந்து இறங்கி ஏதோ கூறிவிட்டு கார் கதவை மூடுகிறார்.
அப்போது அங்கிருந்து வெளியேறிய சிவப்பு ஆடை அணிந்த பின் மீண்டும் புரோட்டான் எக்ஸோரா காருக்கு வந்து அதன் ஜன்னல் கதவை பலமுறை தட்டுவதும் பொறுமை இழந்த அக்கார் ஓட்டுனர் தமது கார் கதவை திறந்து வெளியே வர முயன்றபோது அவரை அந்த சிவப்பு ஆடை அணிந்த பெண்மணி தாக்குகிறார். இதைக் கண்ட பொதுமக்களில் சிலர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.